தொழில்முனைவோரிற்கான வியாபார மேம்படுத்தல்* *செயலமர்வு* எதிர்வரும் 18.06.2026 அன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் பிரதேச அபிவிருத்தி வங்கியினால் காலை மு.ப 8.30 மணி தொடக்கம் பி.ப 12.30 மணி வரை வங்கியின் கடன் திட்டம், கடன் உத்தரவாத நிறுவனத்தின் மூலம் பெற்றுக்கொள்ளும் கடன் திட்டம், இணைய பாதுகாப்பு, வியாபார குறியிடலின் முக்கியத்துவமும் நுட்பங்களும், சந்தைப்படுத்தல் இணைப்பு போன்ற விடயங்கள் தொடர்பான செயலமர்வு நடைபெறவுள்ளது.

மே 31ம் திகதி அனுசரிக்கப்படும் சர்வதேச புகையிலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தினால் (29.05.2026) கடைகள் மற்றும் அலுவலகத்தில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் காட்சிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது

711643164 1412999907526313 7181413056851000673 n

 709101488 1413004710859166 7869053287460320535 n 709679866 1413000060859631 3139295555298186748 n  710625346 1413004634192507 2741815746875419493 n  712466287 1413004560859181 7497296597949047004 n 708814095 1412999994192971 3269980606035481625 n710098307 1413004367525867 8173006389419189641 n

பிரதேச மாவட்ட மற்றும் தேசிய கலை இலக்கிய விழா போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

இப் போட்டிகளுக்கான விதிமுறைகளையும்  விண்ணப்பப் படிவங்களையும் கலாசாரப் பிரிவில் 
பெற்றுக் கொள்ளலாம்.
 
முடிவுத்திகதி.3.7.2026
 
வடமராட்சி கிழக்கு பிரதேச மட்ட விளையாட்டு போட்டி நிகழ்வானது பிரதேச செயலாளர் தலைமையில் 2026/05/22 வெள்ளிக்கிழமை பி.ப. 01.00 மணிக்கு கட்டைக்காடு சென்.மேரிஸ் வி.க. மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கைலாயபிள்ளை சிவகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாத ஆலய பங்குத்தந்தை அருட்திரு. விமலசேகரன் வசந்தன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட நடுவர் சங்கத் தலைவர் அருந்தவராசா யுவராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 
Scroll To Top