

තවත් කියවන්න: உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்தியாளர்கள் சந்தை 2026.01.30
2026ம் ஆண்டிற்குரிய மருதங்கேணி சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களையும் மருதங்கேணி வங்கிச் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான வருடாந்த பொதுக்கூட்டமானது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 27.01.2026 நடைபெற்றது.


(26.01.2026) அன்று கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு பொருளாதார ரீதியாக இடர்பட்டு கொண்டிருக்கின்ற 02 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களிற்கு கற்றல் உபகரணப்பொதி மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் 27.01.2026 யா/உடுத்துறை மகா வித்தியாலயத்தில் (J/430) உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு IOM நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பான புலம்பெயர்தல் (Safty Migration) தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் நடாத்தப்பட்டது. அத்துடன் போதைத்தடுப்பு (Drug prevention), தொழில் வழிகாட்டல் (Career guidance) முதலிய நிகழ்ச்சி திட்டங்களும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டன.

எமது பிரதேச செயலக உத்தியோகத்தர் திரு .காசிநாதன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய தலா 500 பெறுமதியான மா மரங்கள் சமூகபராமரிப்பு வளாகத்தில் சமூக சேவை கிளைஉத்தியோகத்தர்கள் ,விவசாய உத்தியோகத்தர்,சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர்,சுற்றுசூழல் உத்தியோகத்தர் அவர்களினால் சமுதாய சீர்திருத்த கட்டளையாளர்களின் உதவியோடு நாட்டப்பட்டன.
















