2020 ஆம் ஆண்டுக்கான "ஆரஸ்ஸாவ" சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் 1514 பயனாளிகளை இணைத்து யாழ் மாவட்டத்தில் 1வது இடத்தினைப் பெற்றுள்ளது. இதற்கான கௌரவிப்பு கடந்த 13.02.2021 அன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் எமது பிரதேச செயலாளர் அவர்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது. இவ் இலக்கினை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட. உத்தியோகத்தர்கள் அனைவரிற்கும் எமது பாராட்டுக்கள்.
இதில் 100 பயனாளிகளிற்கு மேல் இணைத்துக்கொண்ட உத்தியோகத்தர்கள் - 02,
50 பயனாளிகளிற்கு மேல் இணைத்துக்கொண்ட உத்தியோகத்தர்- 08,
25 பயனாளிகளிற்கு மேல் இணைத்துக்கொண்ட. உத்தியோகத்தர்கள் -27. உள்ளடங்கலாக மொத்தமாக சேகரிக்கப்பட்ட தொகை.ரூபா.3,154,120.00 ஆகும்.

நாட்டின் 73வது சுதந்திரதின கொண்டாட்டம் எமது பிரேதச செயலகத்தில் கொடியேற்றுதல், மரம் நடுதல், சிரமதானத்துடன் நடைபெற்றது.





எமது செயலகத்தின் கணக்காளராக திரு.வல்லிபுரம் சுபாசன் அவர்களும் தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளராக. திரு.பாலகிருஸ்ணன் நிர்மலன் அவர்களும் கடந்த 11.01.2021 அன்று தமது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டனர். அலவலகத்திற்கு வருகை தந்த இவர்களை நலன்புரிச் சங்கத்தினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.



வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று கௌரவ அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.





2021ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று எமது பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கலந்துகொண்டு தற்போதைய Covid-19. வைரஸ் தொற்று நிலமை தொடர்பாகவும் இதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.இந் நிகழ்வில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.



















