2026.08.19 அன்று "போதையை ஒழிப்போம் இலக்குடைய சமூகத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சமூக சேவைககிளை மற்றும் போதைத் தடுப்பு பிரிவினரால் மாற்றுத்திறனாளிகளுக்கு போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வானது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது

J/419 கிராம அலுவலர் பிரிவில் காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரித்தலுக்கான பொதுமக்களுடனான கலந்துரையாடல் 14.08.2026 இடம்பெற்றது. இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அலுவலர்கள் காணி பயன்பாட்டு திணைக்கள அலுவலர்கள், பிரதேச சபை, கமநில சேவைகள் நிலையம் அம்பன் பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இக்கிராம அலுவலர் பிரிவில் இயங்குகின்ற சமுதாயம் சார் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

பிரதேச மட்ட விதவைகள் மற்றும் குடும்பத் தலைவிகள் சங்க புதிய நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் 13.08.2026 அன்று எமது அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது அதன் பதிவுகள்....

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்தி பிரிவினரால் மணப்பெண் அலங்காரம் தொடர்பான பயிற்சி நெறியானது நாகர்கோயில் மேற்கு மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் 2026 .08 .13 அன்று நடாத்தப்பட்டது. இதில் பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்














