முகப்பு
கற்றல் உபகரணப்பொதி வழங்கப்பட்டது
இன்றைய தினம் (05.01.2026) கற்றல் செயற்பாட்டினை மேற்கொள்வதற்கு பொருளாதார ரீதியாக இடர்பட்டு கொண்டிருக்கின்ற குடும்பத்திற்கு கற்றல் உபகரணப்பொதி மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

மூக்குக்கண்ணாடிகள் வழங்கல்
01.01.2026 ஆம் திகதி அன்று, வடக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மூக்குக்கண்ணாடிகள், பயனாளிகளிற்கு பிரதேச செயலாளர் அவர்களினால் கையளிக்கப்பட்டது.


பிரஜாசக்தி
பிரஜாசக்தி தேசிய வேலைத்திட்டத்திற்கான செயற்குழுவிற்கானபயிற்சி பட்டறை பிரதேச செயலாளரின் தலைமையில் உதவித் திட்டமிடல் பணிப்பாளரால் 31.12.2025 ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பண்பாட்டு விழா - 2025 விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழா 2025 ற்கான மேலதிக கலைஞர் தெரிவுக்கான விண்ணப்பங்கள்
கோரப்பட்டுள்ளன.கீழ் வரும் விருதுகளிற்கு தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
1. கலை மருது விருது - 2025 (40 - 59 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கானது)
2. கலைக்கதிர் இளம்கலைஞர் விருது - 2025 (18 - 39 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கானது)
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கலைச் சேவையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் இம் மாதம் 07 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
பிரதேச கலாசார பேரவை,
வடமராட்சி கிழக்கு.















