முகப்பு
கைவிஷேடம் வழங்கும் நிகழ்வு
பாராபவ வருடப்பிறப்பை முன்னிட்டு மருதங்கேணி பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச்சங்கத்தினால் கைவிஷேடம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் [15.04.2026 புதன்கிழமை] மு.ப. 10.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் அவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு கைவிஷேடம் வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற புத்தாண்டுக்கான விசேட கலந்துரையாடலில் ஆசியுரைகள், வாழ்த்துரைகள் இடம்பெற்றன
முதலுதவிப் பயிற்சி நெறி
நேற்றைய தினம் (2026.04.09) மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலில் நிர்வாக உத்தியோகத்தரின் தலைமையில் Humedica நிறுவனத்தின் அனுசரணையில் இரண்டாம் கட்ட முதலுதவிப் பயிற்சி நெறி தொண்டர்களுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டது, பயிற்சி நெறியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. கிராம அலுவலர் பிரிவிற்கென 6 முதலுதவிப்பெட்டிகள் நிர்வாக உத்தியோகத்தரிடம் கையளிக்கப்பட்டன

















