Home
மணப்பெண் அலங்காரம் தொடர்பான பயிற்சி நெறி
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாளர்கள் அபிவிருத்தி பிரிவினரால் மணப்பெண் அலங்காரம் தொடர்பான பயிற்சி நெறியானது நாகர்கோயில் மேற்கு மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் 2026 .08 .13 அன்று நடாத்தப்பட்டது. இதில் பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்

பிரதேச மட்ட விதவைகள் மற்றும் குடும்பத் தலைவிகள் சங்க புதிய நிர்வாகத் தெரிவும்
பிரதேச மட்ட விதவைகள் மற்றும் குடும்பத் தலைவிகள் சங்க புதிய நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் உதவிப் பிரதேச செயலாளர் தலைமையில் 13.08.2026 அன்று எமது அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது அதன் பதிவுகள்....

சீன நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் வீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்
மூத்த கலைஞர்களுக்காக கொட்டாவையில் சீன நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட முன்மொழியப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தில் வீட்டினைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்
இந்த விண்ணப்பப் படிவத்தை கலைத்துறைக்காக நாட்டிற்கு மிக உயர்ந்த பங்களிப்பை வழங்கிய, அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் வீடொன்றினைப் பெற்றுக்கொள்வதற்கான மிகுந்த தேவையுடைய, உண்மையாகவே ஆதரவு தேவைப்படுகின்ற 40 வயதிற்கு மேற்பட்ட இலங்கை கலைஞர்கள் மட்டுமே சமர்ப்பிக்க முடியும்.
“அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு – வடமராட்சி கிழக்கு
“அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு – வடமராட்சி கிழக்கு
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ், “தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணி” என்னும் கருப்பொருளில், “அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்” எனும் இலக்கை நோக்கி சமூகப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் “அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 2026.08.08 அன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆழியளை – கொடுக்குளாய் கடற்கரையோரப் பகுதியில் முற்பகல் 9.00 மணிக்கு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதான நோக்கமாக, மக்கள் பங்கேற்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், பொது இடங்களின் தூய்மையையும் உறுதிப்படுத்துவதுடன், சமூகப் பொறுப்புணர்வையும் மக்கள் பங்களிப்பையும் வலுப்படுத்துவதாகும்.
இதன் ஒரு பகுதியாக, ஆழியளை – கொடுக்குளாய் கடற்கரையோரப் பகுதியில் மக்கள் பங்கேற்புடன் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, கடற்கரை யோரப்பகுதி சுத்தப்படுத்தப்பட்டது. அரச உத்தியோகத்தர்கள்,இராணுவத்தினர்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்பணிகளில் பங்கேற்றனர்.
அத்துடன், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் இன்றைய தினம் “அத்தம” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்புடன் சிரமதானப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிகரமான நடைமுறைப்படுத்தலுக்கு அர்ப்பணிப்புடன் பங்களித்த அனைத்து கிராம அலுவலர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
“மக்களுடன் இணைந்து – தூய்மையான தேசம்” என்ற நோக்குடன், மக்கள் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியான சமூகப் பணிகளை முன்னெடுப்பதன் மூலம் தூய்மையானதும் அழகானதுமான நாட்டை உருவாக்குவதில் அனைவரும் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**“நமது கிராமம் – நமது பொறுப்பு
நமது பங்களிப்பு – தூய்மையான தேசம்”**














