Home
DCC MEETING - SEPTEMBER
2026.09.03 அன்று நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தொடர்பான பதிவுகள்

சிறுவர்களுக்கான சிறுவர் உரிமைகள் மற்றும் மனநலம் தொடர்பான நிகழ்வும் பெற்றோர்களுக்கான பெண்களுக்கான போதைப் பொருள் பாவனை சார்ந்த நிகழ்வும்
மேற்படி நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அலுவலக அனுசரணையுடன், சகவாழ்வுச் சங்கக் குழுவின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்தினால் 21.08.2026 அன்று காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை சிறுவர்களுக்கான சிறுவர் உரிமைகள் மற்றும் மனநலம் தொடர்பான நிகழ்வும் 3.30-4.15 மணி வரை பெற்றோர்களுக்கான பெண்களுக்கான போதைப் பொருள் பாவனை சார்ந்த நிகழ்வும் கீர்த்தனன் மற்றும் பிரபு ஆகிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் செம்பியன்பற்று வடக்கு J/426 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.மேற்படி நீதி அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அலுவலக அனுசரணையுடன், சகவாழ்வுச் சங்கக் குழுவின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்தினால் 21.08.2026 அன்று காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை சிறுவர்களுக்கான சிறுவர் உரிமைகள் மற்றும் மனநலம் தொடர்பான நிகழ்வும் 3.30-4.15 மணி வரை பெற்றோர்களுக்கான பெண்களுக்கான போதைப் பொருள் பாவனை சார்ந்த நிகழ்வும் கீர்த்தனன் மற்றும் பிரபு ஆகிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் செம்பியன்பற்று வடக்கு J/426 கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது.இந்நிகழ்வில் சகவாழ்வுச் சங்க உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள், தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக நலன் விரும்பிகள், மாற்றம் அறக்கட்டளை நிறுவனத்தின் நிர்வாகிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரஜாசக்தி தலைவர் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.மேலும், குறித்த கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பொதுமக்களும் மற்றும் பெற்றோர், சிறுவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, இந்நிகழ்வை சிறப்பித்தனர்


"போதையை ஒழிப்போம் இலக்குடைய சமூகத்தை உருவாக்குவோம்" - விழிப்புணர்வு நிகழ்வு
2026.08.19 அன்று "போதையை ஒழிப்போம் இலக்குடைய சமூகத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக சமூக சேவைககிளை மற்றும் போதைத் தடுப்பு பிரிவினரால் மாற்றுத்திறனாளிகளுக்கு போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வானது கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது

காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரித்தலுக்கான பொதுமக்களுடனான கலந்துரையாடல் 14.08.2026
J/419 கிராம அலுவலர் பிரிவில் காணிப் பயன்பாட்டு திட்டம் தயாரித்தலுக்கான பொதுமக்களுடனான கலந்துரையாடல் 14.08.2026 இடம்பெற்றது. இதில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அலுவலர்கள் காணி பயன்பாட்டு திணைக்கள அலுவலர்கள், பிரதேச சபை, கமநில சேவைகள் நிலையம் அம்பன் பெரும்பாக உத்தியோகத்தர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இக்கிராம அலுவலர் பிரிவில் இயங்குகின்ற சமுதாயம் சார் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்














