நேற்றைய தினம் 22.07.2026 ம் திகதி பிரதேச மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் இரண்டாம் காலாண்டு குழுக் கூட்டமானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில்,
பாடசாலை இடைவிலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடு, பஸ் போக்குவரத்து பிரச்சினை, சமூக பணிக்குழு களவிஜயம், சிறுவர் கழகங்களின் செயற்பாடுகள், சிறுவர்களுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரம் பெற்றுக்கொடுத்தல், போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.















