வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக 03.09.2025 ம் திகதி தொடக்கம் 22.06.2026 ம் திகதி வரை கடமையாற்றி இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவியுயர்வு பெற்று கிழக்கு மாகாண சபைக்கு மாற்றலாகி செல்லும் திருமதி.சு.உஷா அவர்களிற்கான பாராட்டுதல் மற்றும் பிரியாவிடை நிகழ்வானது நேற்றைய தினம் 2026.06.22 அன்று வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் நலன்புரிச்சங்கம் மற்றும் அனைத்து ஊழியர்களிநாலும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டது. இந் நிகழ்வில் பிரதேச செயலக அலுவலர்களுடன் இணைந்து புதிதாக எமது பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட திரு.F.C.சத்தியசோதி அவர்களும் கலந்து சிறப்பித்தார்.















