2020 ஆம் ஆண்டுக்கான "ஆரஸ்ஸாவ" சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் 1514 பயனாளிகளை இணைத்து யாழ் மாவட்டத்தில் 1வது இடத்தினைப் பெற்றுள்ளது. இதற்கான கௌரவிப்பு கடந்த 13.02.2021 அன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களினால் எமது பிரதேச செயலாளர் அவர்களிற்கு வழங்கி வைக்கப்பட்டது. இவ் இலக்கினை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட. உத்தியோகத்தர்கள் அனைவரிற்கும் எமது பாராட்டுக்கள்.
இதில் 100 பயனாளிகளிற்கு மேல் இணைத்துக்கொண்ட உத்தியோகத்தர்கள் - 02,
50 பயனாளிகளிற்கு மேல் இணைத்துக்கொண்ட உத்தியோகத்தர்- 08,
25 பயனாளிகளிற்கு மேல் இணைத்துக்கொண்ட. உத்தியோகத்தர்கள் -27. உள்ளடங்கலாக மொத்தமாக சேகரிக்கப்பட்ட தொகை.ரூபா.3,154,120.00 ஆகும்.
















