Clean Sri Lanka' வேலைத்திட்டத்தின் உயரிய இலக்கை அடைவதற்காக முன்பள்ளி குழந்தைகளிடம் விதைக்கப்படும் 'கழிவு மேலாண்மை' பற்றிய விழிப்புணர்வானது
"நாளைய இலங்கையை மாசற்ற பசுமையான நாடாக மாற்றும்"
எனும் அடிப்படையில் 2026.08.05ந் திகதி
J/418 கிராம அலுவலர் பிரிவின் சென்அன்ரனீஸ் முன்பள்ளியில் திண்மக் கழிவு முகாமைத்துவம் பற்றிய நிகழ்ச்சித்திட்டமானது ECDO & DO (environment) ஆல் இணைந்து நடாத்தப்பட்டது.
வெவ்வேறு வண்ணங்கள் கொண்ட குப்பைத் தொட்டிகளை வழங்கி விளையாட்டினூடாக கழிவுகளை பிரித்து போட கற்றுக் கொடுக்கப்பட்டதுடன்
சிறார்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளும் வகையில் அட்டைப்படங்கள் வழங்கப்பட்டு அதனூடாக 3R தத்துவம் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.














