வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் யாழ் மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை.
நேற்றைய தினம் 11 .02 .2026 புதன்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் மோட்டார் போக்குவரத்து திணைக்களங்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில்கொண்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை நடைபெற்றது . குறித்த நடமாடும் சேவையில்
வாகன அனுமதி பத்திரம் வழங்கல்,
வாகன உடைமை மாற்ற சேவைகள்
நீண்ட காலமாக உரிமை மாற்றல் செய்யப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகள்
மற்றும் வாகன புகை பரிசோதனை போன்ற சேவைகள் இடம்பெற்றது.
அத்துடன் இணையவழி வாகன அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்ளல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளும் இடம்பெற்றது.














