07.02.2026 அன்று எமது பிரதேச செயலகத்தின் பிரியாவிடை மற்றும் ஆண்டிறுதி விழா கலாசார மத்திய நிலையத்தில் இனிதே இடம்பெற்றது.
முதலில் பிரியாவிடை நாயகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து
பிரியாவிடை பெறும் உத்தியோகத்தர்களின் சேவையை நினைவுகூரும் காணொளி திரையிடப்பட்டது. மற்றும் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள், மதிய போசனம் மற்றும் மகிழ்ச்சியான விளையாட்டுகள் மூலம் நாள் இனிதே நிறைவு பெற்றது.













