வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பண்பாட்டு விழா 2025 ற்கான மேலதிக கலைஞர் தெரிவுக்கான விண்ணப்பங்கள்
கோரப்பட்டுள்ளன.கீழ் வரும் விருதுகளிற்கு தகைமையுடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
1. கலை மருது விருது - 2025 (40 - 59 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கானது)
2. கலைக்கதிர் இளம்கலைஞர் விருது - 2025 (18 - 39 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கானது)
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கலைச் சேவையை உறுதிப்படுத்தும் ஆவணங்களுடன் இம் மாதம் 07 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
பிரதேச கலாசார பேரவை,
வடமராட்சி கிழக்கு.













