தேசிய உற்பத்தி திறன் விருது - 2020 போட்டியில் தேசிய மட்டத்தில் 3ம் இடத்தை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் பெற்று கொண்டுள்ளது.
திறன் அபிவிருத்தி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் 2020 ஆம் ஆண்டிற்கான அரச அலுவலகஙகளுக்கு இடையே நடாத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித் தொடரில் எமது வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தேசிய ரீதியில் 3 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியாக பகிந்து கொள்கிறோம்.
இந்த விருதிற்கு சிறப்பாக வழிகாட்டிய மதிப்புக்குரிய பிரதேச செயலாளர் அவர்களுக்கும் கடினமாக உழைத்த ஏனைய பதவிநிலை மற்றும் சகல உத்தியோகத்தர்களுக்கும் இந்நேரத்தில் வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
இந்த விருதினை முன்னேற்றப்படியாக கொண்டு மேலும் சிறப்பாக எமது அலுவலகத்தை வினைத்திறன் மிக்க மக்கள் சேவை அலுவலமாக இயக்கி மக்களுக்கான பணியினை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்வோம். இன்னும் முன்னோக்கி செல்வோம்.














