இன்று எமது பிரதேச செயலாளர் தலைமையில் கிராம மட்ட உத்தியோகத்தர்களிற்கு COVID-19 தொற்று நிலை தொடர்பான விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் COVID-19 தொற்று நிலை காரணமாக எமது பிரதேசம் எதிர்நோக்கியுள்ள நிலை தொடர்பாகவும் ஆழ் கடல் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இவ் விடயம் தொடர்பாக அதிக விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் சமூக நோக்குடன் அனைவரும் செயற்பட வேண்டிய தேவை தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது.
















